புதிய ஆத்திசூடி
காப்பு
பரம்பொருள் வாழ்த்து
ஆத்திசூடி யிளம்பிறை யணிந்து
மோனத் திருக்கு முழுவெண் மேனியான்
கருநிறங் கொண்டுபாற் கடல்மிசைக் கிடப்போன்
மகமது நபிக்கு மறையருள் புரிந்தோன்
ஏசுவின் தந்தை யெனப்பல மதத்தினர்
உருவகத் தாலே உணர்ந்துண ராது
பலவகை யாகப் பரவிடும் பரம்பொருள்
ஒன்றே; அதனியல் ஒளியுறு மறிவாம்;
அதனிலே கண்டார் அல்லலை அகற்றினார்;
அதனருள் வாழ்த்தி அமரவாழ் வெய்துவோம்.

1. அச்சந் தவிர்
2. ஆண்மை தவறேல்
3. இளைத்த லிகழ்ச்சி
4. ஈகை திறன்
5. உடலினை உறுதிசெய்
6. ஊண்மிக விரும்பு
7. எண்ணுவ துயர்வு
8. ஏறுபோல் நட
9. ஐம்பொறி ஆட்சிகொள்
10. ஒற்றுமை வலிமையாம்
11. ஓய்த லொழி
12. ஔடதங் குறை
13. கற்ற தொழுகு
14. கால மழியேல்
15. கிளைபல தாங்கேல்
16. கீழோர்க் கஞ்சேல்
17. குன்றென நிமிர்ந்துநில்
18. கூடித் தொழில் செய்
19. கெடுப்பது சோர்வு
20. கேட்டிலுந் துணிந்துநில்
21. கைத்தொழில் போற்று
22. கொடுமையை யெதிர்த்து நில்
23. கோல்கைக் கொண்டு வாழ்
24. கௌவியதை விடேல்
25. சரித்திரத் தேர்ச்சி கொள்
26. சாவதற்கஞ்சேல்
27. சிதையா நெஞ்சுகொள்
28. சீறுவோர்ச் சீறு
29. சுமையினுக் கிளைத்திடேல்
30. சூரரைப் போற்று
31. செய்வது துணிந்து செய்
32. சேர்க்கை அழியேல்
33. சைகையிற் பொருளுணர்
34. சொல்வது தெளிந்து சொல்
35. சோதிடந் தனையிகழ்
36. சௌரியந் தவறேல்
37. ஞமலிபோல் வாழேல்
38. ஞாயிறு போற்று
39. ஞிமிறென இன்புறு
40. ஞெகிழ்வ தருளின்
41. ஞேயங் காத்தல்செய்
42. தன்மை யிழவேல்
43. தாழ்ந்து நடவேல்
45. தீயோர்க் கஞ்சேல்
46. துன்ப மறந்திடு
47. தூற்றுத லொழி
48. தெய்வம் நீ யென்றுணர்
49. தேசத்தைக் காத்தல் செய்
50. தையலை உயர்வுசெய்
51. தொன்மைக் கஞ்சேல்
52. தோல்லியிற் கலங்கேல்
53. தவத்தினை நிதம் புரி
54. நன்று கருது
55. நாளெலாம் வினைசெய்
56. நினைப்பது முடியும்
57. நீதிநு‘ல் பயில்
58. நுனியளவு செல்
59. நு‘லினைப் பகுத்துணர்
60. நெற்றி சுருக்கிடேல்
61. நேர்படப் பேசு
62. நையப்புடை
63. நொந்தது சாகும்
64. நோற்பது கைவிடேல்
65. பணத்தினைப் பெருக்கு
66. பாட்டினில் அன்புசெய்
67. பிணத்தினைப் போற்றேல்
68. பீழைக் கிடங்கொடேல்
69. புதியன விரும்பு
70. பூமி யிழந்திடேல்
71. பெரிதினும் பெரிதுகேள்
72. பேய்களுக் கஞ்சேல்
73. பொய்மை யிகழ்
74. போர்த்தொழில் பழகு
75. மந்திரம் வலிமை
76. மானம் போற்று
77. மிடிமையில் அழிந்திடேல்
78. மீளுமா றுணர்ந்து கொள்
79. முனையிலே முகத்துநில்
80. மூப்பினுக் கிடங்கொடேல்
81. மெல்லத் தெரிந்து சொல்
82. மேழி போற்று
83. மொய்ம்புறத் தவஞ்செய்
84. மோனம் போற்று
85. மௌட்டியந் தனைக்கொல்
86. யவனர்போல் முயற்சி கொள்
87. யாரையும் மதித்து வாழ்
88. யௌவனங் காத்தல் செய்
89. ரசத்திலே தேர்ச்சி கொள்
90. ராஜசம் பயில்
91. ரீதி தவறேல்
92. ருசி பல வென்றுணர்
93. ரூபஞ் செம்மைசெய்
94. ரேகையிற் கனிகொள்
95. ரோதனந் தவிர்
96. ரௌத்திரம் பழகு
97. லவம் பல வெள்ளமாம்
98. லாகவம் பயிற்சிசெய்
99. லீலை யிவ் வுலகு
100. (உ) லுத்தரை யிகழ்
101. (உ) லோக நு‘ல் கற்றுணர்
102. லௌகிக மாற்று
103. வருவதை மகிழ்ந்துண்
104. வானநூற் பயிற்சி கொள்
105. விதையினைத் தெரிந்திடு
106. வீரியம் பெருக்கு
107. வெடிப்புறப் பேசு
108. வேதம் புதுமைசெய்
109. வையத் தலைமைகொள்
110. வௌவுதல் நீக்கு

யாதும் ஊரே ; யாவரும் கேளிர் ;
தீதும் நன்றும் பிறர்தர வாரா ;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன ;
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,
இன்னா தென்றலும் இலமே; ‘மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இரங்கும் மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல, ஆருயிர்
முறைவழிப் படூஉம்’ என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.

                                                   எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய
                                                   புறநானூறு. 192  - பாடியவர்: கணியன் பூங்குன்றன்